இதழ் 68

தொடரச்சியாக நடைபெறும் துர்க்கா தேவி வீட்டுத்திட்டம் …

தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் பல்வேறு சமூக நலப் பணிகளில், ஒன்றாக இல்லப் பிள்ளைகளிற்குரிய உதவித் திட்டமான, வீட்டுத்திட்டப் பணிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 4 வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

29.01.2023 காலை 8.00 மணிக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் விசேட பூஜை நடைபெற்று அதனைத் தொடர்ந்து தெய்வ திருவுருவப் படங்கள், எடுத்துச் செல்லப்பட்டு புதிதாத நிர்மானிக்கப்பட்ட 4 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டது. இவ் நிகழ்வில் பிரதேச செயலாளர் கலந்து சிறப்பித்து இது போன்ற சமூகப் பணிகளுக்கு தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

துர்க்கை அம்பாளின் அருளால் யாம் கண்ட கனவு நனவாகிறுது. எங்கள் இல்லத்தில் சிறுபிள்ளைகளாக வந்து சேர்ந்து.கற்று , இல்லறவாழ்வில் இணையும் ,நாம் வளர்த்த அன்புப் பிள்ளைகளுக்கு இனாமாக வீடு கொடுக்க வேண்டும் என்று கடந்த 2010 இல் எடுத்த முயற்சி வீண்போகவில்லை. இதுவரை 9 வீடுகள் சீதணமாகக் கொடுத்தோம்.தற்பொது மேலும் 4 வீடுகள் கட்டும்பணி நிறைவடைந்து அவற்றை திறந்து வைத்துள்ளோம்.

எமது இல்லப் பிள்ளைகளின் சகல உயர்விற்கும் நாங்கள் எமது உயர்ந்த அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தி நல்லவற்றை என்றும் செய்வோம் என தெரிவித்தார் செஞ்சொற்செல்வர்.

Related posts

ஈழக்குயிலே…! கவனம்…!

Thumi202121

மின்சாரம் உள்ளவரை அந்தக்காதல் நிலைக்கும்.

Thumi202121

தற்கொலைகளால்தடமழியும்தலைமுறைகள் – 05

Thumi202121

Leave a Comment