இதழ் 88

அமைதி பேசும் உலகம்

விடியலின் மௌனம் போல் அமைதி விரியும்,
புரிதலின் புன்னகை, மனிதம் பிறக்கும்.
அவிழாத முடிச்சாய் இருக்கிறது வன்முறை,
அதை அவிழ்க்கும் கயிறு – பொறுமை, பாசத்தின் உறை.

ஒரு துளி சினம் – ஒரு தீயெனப் பரவும்,
ஒரு சொல் அன்பு – ஒரு சமாதானம் தரும்.
கண்களில் சினம் இருந்தால் உலகம் சுடும்,
இதயத்தில் அமைதி இருந்தால் வாழ்க்கை சிரிக்கும்.

படைகள் அல்ல பாதுகாப்பு,
புரிதல் தான் நம் காப்பு.
நீ நான் என்று பிரிந்து சண்டை செய்யாதே,
நாம் என்றெண்ணி மனிதநேயத்தைச் செய்!

பாசமும், பரிவும் பேசும் இடத்தில்
போருக்கு வாயில்லை, பிணைக்கு இடமில்லை.
நாம் அமைதி தேடி நடந்தால் –
புதிய பூமி உருவாகும் நாள் இன்றுதான்

Related posts

இதழ் 88

Editor

தாய்மொழி காக்கப்படாவிட்டால் தலைமுறைகள் நம் வேரை மறந்து விடும்

Editor

மலையக பெண்களின் சமூக இடைவெளியிருந்து முன்னோக்கிய பாதைஓர் விமர்சன கண்ணோட்டம்

Editor

Leave a Comment