இதழ் 92

சிகரெட் பயன்பாட்டால் வருடாந்தம் 22,000 உயிரிழப்புகள்

போதைப் பொருள் தகவல் மையம் தெரிவிப்பு

புகையிலை மற்றும் சிகரெட் பாவனை காரணமாக இலங்கையில் வருடாந்தம் சுமார் 22 ஆயிரம் உயிரி ழப்புகள் பதிவாகுவதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரி வித்துள்ளது.

நாட்டில் ஏற்படும் அனைத்து இறப்பு களில் 83 சதவீதமானவை தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றது.

இந்த இறப்புகளில் செல்வாக்கு செலுத் தும் நான்கு பிரதான காரணிகளில் புகையிலை பயன்பாடும் ஒன்றாகும்.

இலங்கையில் சுமார் 1.5 மில்லியன் பெரியவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்

திற்கு அடிமையாகியுள்ளனர்.

அதேநேரம், உலகளவில் ஒவ்வொரு ஆறு வினாடிக்கும் புகையிலை பயன்பாடு காரணமாக ஒரு இறப்பு பதி வாகுவதாக புகையிலை மற்றும் மது பானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க குறிப்பிட்டார்.

Related posts

தனிமை – நவீன சமூகத்தின் மறைமுக நோய்

Editor

இதழ் 92

Editor

பட்டுப்போகவில்லை அந்த தென்னை

Editor

Leave a Comment